உலகையே அடிமையாக்கும் ஆளுமை..!

ரோஜா 🌹🌹🌹
வா… நீ…வாவென
தலையசைத்தாள்
தேனீக்கள் தேடி வர
தென்றலில் மிதந்திருந்தால்

தெள்ளத் தெளிவான
புன்னகை
தேகமெங்கும்
தெவிடட்டாத வாசனை

பார்க்கும் நேரமெல்லாம்
புத்தம் புதியதாய்
நித்தம் ஒரு
முத்தம் தரும் சிந்தனை

அவளின் ஒரே ஒரு
புன்னகை மட்டும் போதும்
நான் மட்டுமல்ல இந்த உலகையே அடிமையாக்கும் ஆளுமை

நானிக் கோணி
முகம் சிவக்க
குனிந்த தலை நிமிராமல்
நிலம் பார்த்து
நின்றிருந்தால் நேற்று வரை. ❗

ஜன்னலுக்கு வெளியே
கண்களின் வழியே உறவு
காத்திருந்தேன்
எதிர்பார்த்திருந்தேன்
தொட்டனைக்க முடியவில்லை

முட்களுக்கு நடுவில்
சொற்களுக்கு அடங்காத
அழகுடன் அவள்
பற்கள் இல்லாத புன்னகை

பார்ப்போர் பரிதவிக்க
பல வண்ண நிறங்களில்
பிரசவிக்க
பாசத்தை நேசத்தை
வாசமாய் வீசிடுமவள்

என் வீட்டுத் தோட்டத்தின்
ரோஜா இதழ்
பிறந்தது தெரியும்
இறந்ததை அறியவில்லை
இன்று அவள் தெரியவுமமில்லை
ஜன்னல் வெளியே….. ❗

அ. அ. NS…. ✍️
வவுனியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *