கடந்த 24 மணித்தியாலத்தில் பாலஸ்தீனத்தின் மீது 400ற்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்ரேல தாக்குதல்..!

இஸ்ரேலானது 18 வது நாளாக பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேலானது 400ற்கும் மேற்பட்ட இடங்களில் வான்வெளி தாக்குதலை நடாத்தியுள்ளது.

இதன் காரணமாக பல பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளால் பாலஸ்தீன மக்கள் தங்களது குழந்தைகளின் கைகளில் பெயரினை எழுதிய வண்ணம் உள்ளனர்.இஸ்ரேலானது கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தி வருகிறது. இந்நிலையில் தங்களது குழந்தைகளுக்கு ஏதேனும் நிகழ்தால் கண்டு பிடித்துக்கொள்ள இலகுவாக இருக்கும் என்று இதனை செய்து வருகின்றனர்.

இதே வேளை இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை பலரும் கண்டித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *