இந்தியாவின் ஒருமை பாட்டை நீக்கும் தன்மை இதற்கு உண்டா?

பூமி

பந்தின்

அரியது

நெடியது

பெரியது.

உயிர்வாழிகளின்

உயிர்.

களைப்பாறுதல்.

அமிர்தம்.

தவித்த

நாவின்

ஜீவ

உயிர்ப்பு.

தூக்கத்தின்

விழிப்பின்

இடை

ஊடல்.

உடலின்

எண்பது

சதவிகிதம்.

ஐந்து

முதல்

ஆறு

லிட்டர்

இரத்தம்.

செரிமாணத்தின்

செங்காந்தல்.

உணவு

உயிர்

ஹார்மோன்

சுரப்பிகளின்

ஆதி

தாளம்.

ஆனந்த

மோளம்.

வெள்ளை

சிவப்பு

கரு

உரு

சில

உயிர்

பைகளின்

பொக்கிஷம்.

ஈரல்களின்

போராட்டம்.

சிறுநீரகத்தின்

உழைப்பாளி.

தொண்டையின்

சாந்தி.

கோபத்தில்

சினத்தில்

வார்த்தையில்

துக்கத்தில்

பஞ்சாயத்தின்

மீள்

நிவாரணி.

இந்தியாவின்

ஒருமை பாட்டை

குலைக்கும்

வலிமை.

உலகத்தின்

பங்கீடுகளை

பூர்த்தி

செய்ய

இயலா

மனிதனின்

பேராசை

தீயில்

தன்

உயிர்தன்மை

உயர்தன்மை

கொடை தன்மை

ஆகியவற்றை

இழந்து

அவமானப்படும்

தண்ணீரின்

அழுகை

மானம்

அறியாத

மயானமனிதர்கள்.

நீரை

பங்கிட்டு

தரமுடியாத

ஆட்சியாளர்கள்

அவன்

எந்த

கட்சியாக

இருந்தாலும்

அவனும்

அவன்

சார்ந்த

கட்சியும்

கையாலாகாத

தேசத்தின்

சாட்சி

மாத்திரமே!

வல்லரசு

குடியரசு

சுதந்திரம்

ஆர்ப்பாட்டம்

ஆரவாரம்

வெற்றி

களிப்பு

பிற

கிரக

ஆராய்ச்சி

செயற்கைகோள்

வெங்காயம்

புடலங்காய்

எல்லாம்

தண்ணீரின்

நீர்க்கால்

போடும்

காலணி

அதற்கு

ஈடாகாது.

உழவு

உழைப்பு

வியர்வை

செங்குருதி

ஒடும்

தந்துகி களின்

நீர்ஓட்டம்

நிணநீர்

அறியும்.

மூளை

செல்களின்

உயிர்ப்பு

அறியும்

தண்ணீர்.

விலை

மதிப்பு

இல்லாத

மதிப்பு

குறியீடு.

தாகத்துக்கு

தண்ணீர்

கொடு.

இல்லையேல்

வாழாதே!

செத்து

போ!

உன்

அரசாட்சி

தர்பார்

இவைகளை

விட

கூவம்

உயரியது.

எழுதுவது கவிஞர் கேலோமி

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *