இன்று மழை வருமா?

நாட்டில் ஓரிரு வாரமாக மழையுடனான வானிலை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இதன் காரணமாக பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதே வேளை மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இன்றைய தினமும் பிற்பகல் 1.00மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடைய இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் ஏற்படும் எனவும் ஆபத்துகளை தவிர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *