அரவம் தீண்டி இளைஞர் பலி..!

கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுட்டுமானோடை பிரதேசத்தில் அரவம்
தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் அண்மையில் திருமணமானவர் என்றும்,அவருக்கு 24 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பாரதிபுரம் ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மார்ட்டின் சில்வா காசுதன் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

தனது தொழிலின் நிமிர்த்தம் பண்ணை உரிமையாளர் ஒருவருக்கு அவரின்,மாடுகளை பராமரிப்பதற்காக புளுட்டுமானோடை பகுதியில் அமைந்திருந்த வாடியில் உறங்கிக்கொண்டிருக்கும்,
போது வாந்தி மற்றும் மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்படுகிறது.

கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பாவையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்துள்ளார்.விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *