நெடு நாள் பயணம்..!
இங்கே நெடு நாள்
வாழ வேண்டும் எனும் ஆசை
எந்தெந்தெந்த
உயிர்களுக்கும் உண்டு …!
அது ஒரு எறும்பாக இருந்தாலும் …
மனிதர்களாகிய
நாமாக இருந்தாலும் …!
அந்த நெடுநாள் ஆசை எதற்காக …
எறும்பு அதை அறியாது …
அது ஒரு அஃறிணை
அதாவது அதனதன் மரபணு …!
அதனதன் மூளைக்குள் தினிக்கப்பட்ட …
அதற்கான பாதை
( இதில் எல்லா விதமான அஃறிணைகளுக்கும் அதுதான் விதி )
ஆனால் இந்த மனித இனம்
மட்டுமே எல்லா விதிகளையும்
தகர்த்து எறிய முடியும் …!
கால் நடையாக நடந்த நாம்
விமானம் ஏறிப் பறப்பது …
இந்த இயற்கையின்
விதியையே மீறிய செயல் தானே …!
ஆனால் இந்த இயற்கை
அது தன் உயிர் வாழ்வையே
இழக்கும் சூழ்நிலை வரும் போது இந்தப் பகுத்தறிவை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது அழித்து விடும் …!
தயவு செய்து வளருங்கள் வாழுங்கள் … மகிழ்ச்சியாக இருங்கள் … ஆனால் இயற்கையே மூல முதல் அன்னை … அதற்குப் பிறகு தான் நம்மைப் பெற்றெடுத்த அன்னை …!
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052