ஏழைகளின் ராணி …!

விசிறி

இயற்கை காற்றுக்கு உரித்தானவள்
பல பண்டிகைகளின் கடைகளில் உலா வருபவள்

ஏழை குடிசைகளின் ராணி
மின்சாரம் இல்லாத நேரங்களில் உன்னை தேடுவர்

சிறு குழந்தைகளின் விளையாட்டு எந்திரம்
அன்றைய கால மின்விசிறி
உன்னையும் நெகிழிக்கு மாற்றி விட்டார்கள் எந்திர வாழ்க்கையில்

பல வண்ணங்களில் மின்னுபவள்
தென்னை மரத்திற்கும், பனை மரத்திற்கும் சொந்தக்காரி யானவள்

கோடைகளில் கோடை ராணி காற்றை செலவில்லாமல் அள்ளி வழங்குபவள்

நிலவுத்தோழி
ஆர் ஜே உமாதேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *