இஸ்ரேல் பாலஸ்தீனத்திடையேயான போர் நிறுத்தம் நீடிப்பு

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மிது ஒரு மாதத்திற்கு மேலாக சரமாறியாக தாக்குதல் நடத்தி வந்தது .

மேலும் நீர்,உணவு,மின்சாரம்,மருத்துவம் என அனைத்து அத்தியவசிய தேவைகளையும் இடை நிறுத்தியது. இதன் காரணமாக பாலஸ் தின மக்கள் இருளில் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்தனர்.


.

இதே வேளை போர் நிறுத்த முயற்சியின் காரணமாக முதற் கட்டமாக 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இப்போர் நிறுத்த காலத்தில் இரு சாராரிடமிருந்தும் பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.இதே வேளை இதற்கு மேலதிக மாக மேலும் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கமைய மேலும் சில பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இருசாரரும் பணயக்கைதிகளை மும்முரமாக பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டியதை தொடர்ந்து. நேற்றோடு நிறைவடை போர் நிறுத்தம் மீண்டும் இன்றும் மேலதிகமாக அமுலில் இருக்கும் என்று கட்டார் உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளது.

போரால் பல கஷ்டங்களை எதிர் கொண்ட மக்களுக்கு இந்த போர் நிறுத்தமானது ஓர் ஆறுதலாக அமைந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *