போப் ஆண்டவரின் டுபாய் பயணம் இடை நிறுத்தம்..!

போப் ஆண்டவர் உடல் நலக்குறைவின் காரணமாக ஐ.நா சபையின் சர்வதேச காலநிலை மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

தனது 87 வயதை டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்யும் போப் பிரான்ஸிஸ் டுபாயில் நடைப்பெறும் மாநாட்டில் கலந்து கொள்வதாக இருந்தது. எனினும் கடந்த ஒரு வாரகாலமாக நுரையீரல் வீக்கம்,காச்சல் காரணமாக கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக வத்திக்கான் அரண்மணை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து போப் ஆண்டகை உடல் நலனை கருத்திற்கொண்டு வைத்தியர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

இதன் பிரகாரம் போப் ஆண்டகையின் டுபாய் பிரயாணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *