20 வயதுடைய நபரை முதலை இழுத்து கொன்ற துயரம்..!

20 வயதுடைய ஆண் ஒருவரை முதலை இழுத்து சென்று கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணவனும் மனைவியும் தொடுவான் குளத்தில் குளிக்க சென்ற நிலையிலேயே முதலை இழுத்து சென்றுள்ளதாகவும்,மனைவி காப்பாற்ற முயற்சித்தும் பலனளிககாத நிலையில் பிரதேச மக்கள் தேடியுள்ளனர்.இதனையடுத்து நேற்று மாலை 5.30 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தோப்பூர் பாட்டாளி புரத்தை சேர்ந்த கதிர்காம தம்பி நிதுர்ஷன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *