10 லட்சம் முட்டைகள் சதொச மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை..!

எதிர்வரும் பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள்,

ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில்,

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இன்று முதல் லங்கா சதொச நிறுவனத்திற்கு தினமும் 10 இலட்சம் முட்டைகள் விநியோகிக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *