டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது..!

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறித்த  பிரிவு கூறியுள்ளது.

மேலும் ஜனவரி மாதம் வரை 60க்கும் மேற்பட்ட டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் 24 ஆக குறைந்துள்ளது.

அத்துடன் பெப்ரவரி மாதத்தில் 5,181 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *