டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான சுத்திரிப்பு ஊழியர்கள் போராட்டத்தில்..!

சம்பள உயர் மற்றும் நிரந்தர நியமனம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த வகையில்
சம்பள உயர்வு மற்றும் நிரந்தர நியமனத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டமானது வட மாகாண சுகாதார பணிமனைக்கு முன்பாக டெங்குப் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான சுத்திகரிப்பு பணியில் ஈடுப்படும் ஊழியர்கள் இவ்வாறு போராட்டை முன்னெடுத்தனர்.

அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன் போது தாம் ஏழு வருடங்களுக்கு மேலாக டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும்,

தமக்கு இதுவரைகாலமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இதுவரைகாலமும் ஊதியமாக 22,000 ரூபாயே கொடுக்கப்படுவதாகவும், இதனைக் கொண்டு வாழ்க்கையை நடத்த முடியாமல் தாம் தவித்து வருவதாகவும் எனவே அதிகாரிகள் இதனைக் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *