பாம்பை கடத்திய பெண் கைது…!

தங்கம் கடத்தி சிலர் சிக்கி கொண்டு இருக்கிறார்கள்,மஞ்சள் கடத்தி சிலர் சிக்கி கொண்டு இருக்கிறார்கள்,போதைப்பொருட்களை கடத்தி சிலர் சிக்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பார்த்தால் படையும் நடுங்கும் என்று சொல்லக்கூடிய பாம்பினை கடத்தி சிக்கி கொண்ட சம்பவம் ஒன்று சில நாட்களுக்கு முன் பதிவாகியுள்ளது.

சீனாவின் குவாங்டன் மாகாணத்தில் உள்ள ஃபுக்சியன் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் நுழையும் போது பெண்ணொருவர் வினோதமான உடல் வடிவத்துடன் இருப்பது சுங்க அதிகாரிகளின் கண்களுக்குத் தென்பட்டது.

அவரது அசாதாரண உடல் வடிவம் காரணமாக, சுங்க அதிகாரிகள் அந்த பெண்ணை சோதனையிட்டபோது ​​​​அவரது மார்பில் 5 உயிருள்ள பாம்புகள் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

குறித்த பெண்ணின் அடையாளம் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐந்து பாம்புகளையும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க சுங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *