பூனையை காப்பாற்ற கிணற்றில் விழுந்தவர்கள்..!

இந்தியாவின் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வக்கடி என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை,

காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பூனையை மீட்க கிணற்றில் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு இறங்கிய 6 வது நபர் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாழடைந்த கிணறு விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *