கோடைகால விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை..!
கோடைகால விடுமுறையை முன்னிட்டு இந்தியாவின் பெங்களூர் மற்றும் திருவனந்தபுரம் இடையில் விசேட ரயில் சேவை ஈடுப்படுத்தப்படவுள்ளது.இதற்கமைய இன்றிருந்து எதிர்வரும் மே மாதம் 30 ம் திகதி வரை இந்த சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகளின் நலன் கருதி இந்த விசேட சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பெங்களூரில் இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2.00 மணிக்கு குறித்த ரயில் திருவனந்த புரம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
