புன்னகை…!

🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺 *பூக்கள் ஒரு "பா"கள்* ஆக்கம் : *கலைவாணி*

🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹

வெயிலில் காய்ந்தாலும்
மழையில் நனைந்தாலும்
காற்றில் அலைக்கழித்தாலும்
நான்
“புன்னகைக்க” என்றுமே
தவறியது இல்லை….|

நான்தான்
தாவரங்களின்
கர்ப்பப்பை.. ….

உங்களுக்கு
இதழ் இருப்பது போல்
எனக்கும்
இதழ்கள் இருக்கின்றது
ஆனால்
நான் பேச மாட்டேன்
ஏனெனில்?
மௌனம்
வார்த்தைகளை விட
வலிமையானது…..!

நீங்கள்
நான் செழிப்பாக
இருக்கும்போது
நீங்கள்
தலையில்
தூக்கி வைத்துக்
கொண்டாடினாலும்
நான் மகிழ்ச்சி
அடைவதில்லை…ஏனெனில் ?
நீங்கள் நான் வாடியவுடன்
தூக்கி குப்பையில்
எறிவீரகள் என்று
எனக்கு நன்றாகத் தெரியும….

நிறங்களில்
வேறுபாடு இருந்தாலும்
பெயர்களில்
வேறுபாடு இருந்தாலும்
குணங்களில்
வேறுபாடு இருந்தாலும்
“மலர்” என்பதில்
நாங்கள்
ஒன்றுபட்டு இருக்கிறோம்….

காலையில் மலர்ந்து
மாலையில் உதிர்ந்தாலும்
உங்களைப்போல்
நாங்கள்
வீணாக உதிர்வதில்லை….! - *கலைவாணி*

🌺🌹🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *