தற்கொலை – எழுதுவது கவிஞர் கேலோமி

தற்கொலை

தன்
உயிரை
உடலை
துச்சமாக
மதித்து
மாய்த்து
சாவதற்கு
பெயர்
தான்
தற்கொலையா?
இவ்வளவு
சமுதாய
கட்டமைப்பு
அரசுகள்
குடும்பங்கள்
கல்வி
அறிவு
விஞ்ஞானம்
மொழி
மதம்
பண்பாடு
உறவுகள்
உள்ள
சமுதாயத்தில்
கைவிடப்பட்ட
மனநிலையா?
தனி
மனிதனை
கடன்
கல்வி
வெறுமை
இழப்பு
உணவு
பொருளாதாரம்
வெற்றி
தோல்வி
இவற்றால்
ஏற்பட்ட
மன
பதற்றத்தின்
உச்சமா?
உயிர்கள்
தன்னை
மாய்த்து
சாவது
அறியாமை.
மனம்
மருத்துவம்
மகத்துவம்
பல
நீதி
நூல்கள்
அறம்
உள்ள
உலகில்
அறியாமை
களைவதே!
பேரறிவு.
வாழ்வதற்கு
கடைசி
நிமிடம்
வரை
போராடு.
எந்த
நிமிடமும்
உன்
வசம்
வாழ்க்கை
அமைக்க
போராடு.
தற்காத்து
கொள்.
உலகம்
இயற்கை
உயிர் வாழிகள்
என்றும்
அழியாத
பேருண்மை
ஞானம்
இறைவன்
உணர்வுகள்
ஆன்மா!
உன்னிடமே!
அதை
பறிக்க
வகுக்க
உன்னை
தகர்க்க
இங்கே
இறைவனுக்கே !
அனுமதி
இல்லை.
உன்
கடைசி
நொடி
முடியும்
போதும்
ஓர்
நிமிடம்
சேர்த்து
வாழ
பழக
கற்க
சுவாசித்து
இதயம்
துடிக்க
நினைவுகள்
மீட்ட
கவிதை
படைக்க
வாழ்த்துக்கள்..
கேலோமி
மேட்டூர் அணை.
சேலம் மாவட்டம்
. 9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *