அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29) நிறைவடைகிறது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரசு ஊழியர்கள், இன்று தங்கள் பணியிடங்களில் தபால் மூலமாக வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.


தபால் மூல வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது. தொடர்ந்து 25 மற்றும் 28ஆம் திகதிகளிலும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.


இதேவேளை, வாக்காளர் அட்டைகள் விநியோகமும் இன்று நிறைவடைகிறது. இதுவரை சுமார் 90 சதவீத வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *