எதிரணி வீரரும் மனங்கோணாத படி எம் வெற்றியை பெறுவது சிறப்பு – மூத்த விளையாட்டுவீரர் திரு.ராஜேஸ்வரன்

ஒரு விளையாட்டில் எதிரணி வீரர்களும் மனங்கோணாத படி நாம் வெற்றியை தனதாக்குவோமாயின் அதுவே விளையாடின் மூலம் எம் வாழ்வுக்காக எடுத்துச்செல்லும் நற்பணபாக அமையும் என்று அகில இலங்கை ரீதியில் பிரகாசித்த யாழ்மாவட்ட மூத்த விளையாட்டு வீரர் திரு ராஜேஸ்வரன் தெரிவித்தார். கரப்பந்தட்டம்,பட்மின்டன் மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் அகில இலங்கை ரீதியில் 60கள் முதல் பிரகாசித்த வீரர் திரு ராஜேஸ்வரன் அவர்கள்.

இன்றும் தன்னாலான பணிகளை தாயகத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கும் விளையாட்டுவீரர் திரு ராஜேஸ்வரன் அவர்கள் அண்மையில் வெற்றிநடை நேரலையில் பங்குபற்றிய உரையாடலில் தன் அனுபவங்களை பகிர்ந்தார்.

அந்த உரையாடலை கேட்கவும் பார்க்கவும் கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *