இந்திய பாகிஸ்தான் போட்டியில் மழை குறுக்கீடு..!

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் தொடரின் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி பல்லேகெல மைதானத்தில் பல பரீட்சை நடாத்துகின்றன. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா முதலில் துடுபெடுத்தாட தீர்மானித்தது .இதற்கமைய இந்திய அணி சிறப்பாக விளையாடியது எனினும் மழை குறிக்கிட்டதன் காரணமாக தற்போது போட்டி இடை நிறுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மழை நின்றவுடன் போட்டி நடைப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *