புதுவருடம் வரை எந்த மேலதிக கட்டுப்பாடுகளும் அமுலுக்கு வராது|சஜிட் ஜாவிட்

புதுவருடம் வரை  இங்கிலாந்தில் எந்தவிதமான  புதிய கோவிட் கட்டுப்பாடுகளும்  இல்லை என்று சுகதார அமைச்சர் சஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது  மிகக்கூடிய கவனம் எடுத்துக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் புதிய ஆண்டிற்குள் நுழையும்போது, நிச்சயமாக நாம் ஏதேனும் கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா என்று தீர்மானிப்போம், ஆனால் அதற்கு மேல் எதுவும் இல்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த நாள்களில் பிரிட்டனை பொறுத்தமட்டில் ஆகக்கூடுதலான மக்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது என்று புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.