ஈழ தமிழன்

ஈழ தமிழனாய் பிறந்தேன்
உரிமைக்கு உரம் கேட்கின்றேன்

விதைக்கு தண்ணீர் உயிர்கொடுக்க
செவ்வானச் சூரியன் ஒளிக்கொடுக்க
செவ்வனே விதைகள் துளித்ததுவோ

தூரிகை வானம் தூரல் தூவ
மண்ணும் விண்ணும் காதல் கொண்டது
மண்வாசத்தில் மனமும் மகிழ்ந்தது

இயற்கை பாரபட்சம் பார்க்கவில்லை
இன்று பிறந்தவன் முதல்
அன்று இறந்தவன் வரை

இன்றும் ஏதேதோ சொல்லி
என்றும் மறுக்கின்றான் உரிமையை

உணருங்கள் உனக்கும் எனக்கும்
ரத்தம் முதல் சித்தம் வரை

எல்லாம் ஒன்றே என்று
நீ உணரவில்லையெனில்
கடவுள் உணர்த்துவார்

– கவிஞர் ந.பா.மேஹவர்ஷினி
புதுக்கோட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *