மதுவின் மாயை

காடுகளில் தேடி
உழைத்தவள் வீடு சேரும் அந்திப்பொழுதில்
நீ புரண்டு கிடக்கிறாய்
புழுதி மண்ணில்…

தட்டுத்தடுமாறி தன் விதி இதுவென்று தலையில்
அடித்தாள்
கண்ணீர் தவிர அவளிடம் கரைபுரள ஏதுமில்லை…

தரதரவென்று வீட்டினுள் இழுத்துச்சென்று தாளிட்டாள் மெதுவாக
வெளியே தெரிந்தால் வெட்கக்கேடு என்று
வெட்கித் தலை குனிந்தாள் விதியை நொந்து…

வீதியிலே விளையாடும் குழந்தைகளின்
கேலிப்பேச்சுக்கு அஞ்சி
காலிப்பானைகளுடன்
கண் சிவந்து காத்திருந்தன குழந்தைகள்…

ஆளாக்கு சோறாக்கி
அரை வயிற்றுக்கு
அன்னம் இட்டள்…

குடும்பப் பாரம் சுமக்கக்
கூடாதாவன்
குடியின் சுகம் மட்டும் வேண்டுகிறான்…

மேடைதோறும் முழக்கங்கள் வீதிதோறும் தோரணங்கள் கோவிலுக்குச் செல்வதென்றால் கேலி செய்யும் நீதி நாட்டில்
குடி தன் குல தெய்வமாகி குடும்பத்தை பலிகடா ஆக்கி கும்பிடும் குடிமகன்கள்…

குழந்தைகளின் கனவை கனவாகவே ஆக்கி
ஏழையின் குடிசையில்
எரியாத சிம்மினிகள்…

வெளிச்சம் மட்டும் வீதி எங்கும் அரைகுறை ஆடையுடன்…

எழுதுவது : பெ.மாலையம்மாள்@ராசாத்தி
ஸ்ரீ வில்லிபுத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *