சீமெந்து விலை குறையுமா…?

சீமெந்தின் விலையை 400 -500ரூபாய் வரை குறைக்க முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிர்மாணத்துறை பங்கு தாரர்களுடன் நடைப்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிடும் போது இதனை தெரிவித்தார் .தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் இறக்குமதி செய்வது தொடர்பாக இந்தியா ,பாகிஸ்தான் நிறுவனங்களுடன் இலங்கை கலந்துறையாடி வருவதாக மேலும் தெரிவித்தார்.

சீமெந்து விலை உயர்வினால் கட்டுமானத்துறையில் ஈடுபடும் தொழிலாளர்கள் நேரடியாக பாதித்துள்ளனர்.பலருக்கு வேலைவாய்ப்பு இன்றியும் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
சீமெந்து விலை குறையும் பட்சத்தில் கட்டுமானத்துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு இது ஓர் வரபிரசாதமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *