பஸ் விபத்தில் 20 பேர் காயம்

ஹேலியகொட பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் 20பேர் காயம் .5 பேர் கவலைக்கிடம்.

இரத்தினபுரி கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸெல்ல பயிற்சி நிலையத்திற்கு அருகில் இன்று காலை 10.00மணியளவில் இந்த விபத்து இடத் பெற்றுள்ளது.

தனியார் பஸ் ஒன்று வீதியில் சறுக்கி சென்று சொகுசு பஸ்சின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது சொகுசு பஸ் முன்னோக்கி சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதியது.
இவ்வாறாக இடம் பெற்ற விபத்தில் 20 பேர் காயத்திற்குள்ளானார்கள்.

பரபரப்பான காலை வேலையில் நடந்த இவ் விபத்தானது அனைவரையும் கவலைக்குட்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *