பாடசாலைகள் மூடப்படுகிறதா…?

இலங்கையில் ஆயிரக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.நாடு முழுவதும் 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 2,000 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டம் தயாரித்துள்ளது . தேசியக் கல்வி சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் பாடசாலைகளுக்கான மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 300 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிட தக்கது.

இதே வேளை மலையக பாடசாலைகளில் எந்த வித அபிவிருத்தியும் இன்றி கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் மேற்கொள்ள முடியாத சூழ்நிலைகளை மாணவர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

மலையக மாணவர்களின் நலன் கருதி பாடசாலை வளங்களை சீர்படுத்தி வழங்கப்படுமாயின் அது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *