இப்படியும் கடத்தலா..?

இன்றைய கால கட்டத்தில் கடத்தல் என்பது சர்வசாதாரண ஒன்றாக மாறிவிட்டது.இலங்கையை பொருத்தவரை கடந்த காலத்தில் மஞ்சள் கடத்தல்,போதைபொருள் கடத்தல் என்பன பல்வேறு முறைகளில் இடம்பெற்றன.இதன்போது பலர் கைது செய்யப்பட்டனர்.அவ்வாறான ஓர் சம்பவம் தான் இன்றும் இடம்பெற்றுள்ளது.

பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான திரவ தங்கம் அடங்கிய 04 பொதிகளை, விமான நிலையத்தில் அழகுசாதான பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் கடமையாற்றும் 24 வயதான இளம் பெண்ணொருவர் தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இவ்வாறான சம்பவங்களில் ஈடுப்படும் போது.எதிர்கால சமூகத்தின் நிலை என்னவாக இருக்கும்.

ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்றவேண்டிய தருணம் இது என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *