இலகு ரயிலில் பயணிக்க தயாராகுங்கள்…!

ரயிலில் பயணிக்க அனைவருக்கும் பிடிக்கும் …இதிலும் இலகு ரயில் பயணம் கிடைத்தால் சொல்லவா வேண்டும்.

முன்னால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட இலகு ரயில் திட்டத்தை தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மீண்டும் ஆரம்பிக்கவுள்ளார்.

இதற்காக ஜப்பானுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து ,சிறந்த பொது போக்குவரத்தினை வழங்கும் நோக்குடன் 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக தீர்மானித்ததையடுத்து, இலங்கைக்கு 5,978 மில்லியன் இழப்பு ஏற்பட்டமையும் குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *