மஹா கும்பாபிஷேக பெரு விழா..!

மலைகள் சூழ்ந்து இயற்கை வனப்போடு திகழும் உடப்புசல்லாவ ஈனிக் தோட்டம் பெரிக் டிவிசனில் எழுந்தருளி இருக்கும் ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் ஜீரனோதார அஷ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி விழா எதிர்வரும் ஞாயிற்று கிழமை 16.07.2023 அன்று இடம்பெற உள்ளது.

ஶ்ரீ முத்து மாரியம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகமும் நடைப்பெருவதோடு அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது.

பூஜைக்கு தேவையான மலர்கள்,பால் என்பவற்றை வழங்கியும் ,பூஜையில் கலந்துக் கொண்டும் அன்னையின் அருளையும் பெறலாம்.

பூஜைகள் அனைத்தும் பிரதம குரு சிவ ஶ்ரீ த.தேவேந்திர குருக்கள் JP அருள் மிகு (கதிர்வேலாயுதசாமி தேவஸ்தானம் -சென்கிரேட் தோட்டம், உடப்புசல்லாவ) தலைமையில் இடம்பெறும் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *