ஹெலிகொப்டர் விபத்தில் ஆறு பேர் பலி..!

மக்களுக்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டும் உலகை சுற்றி பார்க்க வேண்டும் என ஆசைகள் தோன்றும்.இந்த ஆசைகள் சில வேளை ஆபத்தையும் ஏற்படுத்தி விடும்.இதற்கமைய நேபாளம் எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிட சென்றவர்களுக்கு நேர்ந்துள்ளது.

சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற ஹெலிகொப்டர் மலை மேல் இருக்கும் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை ஹெவரெஸ்ட் சிகரத்தை பார்வையிட 5 சுற்றுலா பயணிகள் உட்பட 6 நபர்களுடன் பயணித்துள்ளது.குறித்த ஹெலிகொப்டரானது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

இதனிடையே பகன்ஜே கிராமத்தின் லம்ஜூராவில் உள்ள சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகொப்படரின் உடைந்த பாகங்களும் 6 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *