இளம் பெண் மரணம்..!

சமூக ஊடகங்களால் பலர் தமது வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் வாழ்வை தொலைத்தவர்களும் இருக்கிறார்கள்..அந்த வகையில் டிக்டொக்கில் ஒருவரை காதலித்து அவரை கரம் பிடித்து கடைசியாக மரணித்தில் முடிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சுண்ணாகம் பகுதியை சேர்ந்த 19வயதுடைய ஜெயசீலன் பபிசாலினி என்ற பெண் சீதுவை பிரதேசத்தை சேர்ந்த இளைஞனை டிக்டொக் மூலம் காதல் செய்து திருமணம் முடித்துள்ளார்.சில மாதங்கள் கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் முரண்பாடுகள் காரணமாக மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து வாழ்ந்துள்ளார்.

இதனிடையே தனது கணவன் சீதுவைக்கு வரசொல்லியும்,புகைப்படங்கள் அனைத்தையும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றுவேன் என கூறியும் தொந்தரவு கொடுத்த நிலையில் குறித்த யுவதி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயற்சி செய்து யாழ் போதானா வைத்தியசாலையில் உறவினர்களால் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறன நடவடிக்கைகள் அதிகளவு நடைப்பெற்ற வண்ணம் இருக்கின்றன. சமூக ஊடகங்களை கையாளும் போது மிக அவதானமாக கையாள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *