மாபெரும் கணித விழா வல்வையில்- 2023

2023 ஆம் ஆண்டுக்கான மாபெரும் கணித விழா எதிர்வரும் (22.07.2023) அன்று நடைபெற இருக்கிறது.

இதில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 150 பாடசாலைகள் பங்குபற்றும் அதே வேளை ,1000க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு விருதும் வழங்கப்பட இருக்கிறது.

இந்நிகழ்வானது வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் திருமண மண்டபத்தில் நடைப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இப்போட்டிகளை வல்வெட்டிதுறையை சேர்ந்த லண்டனிலிருந்து இயங்கும் சிதம்பரா கணிதப்போட்டிக்குழு ஏற்பாடு செய்திருந்தது. தாயகத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முற்றிலும் இலவசமான பரீட்சையாக வெவ்வேறுநிலைகளில் நடாத்தி வெற்றியாளர்களை அறிவிக்கப்படும்.

இந்த வருடமும் தாயகத்திலிருந்து ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற முன்னிலை மாணவர்களை பிரித்தானிய அரங்கில் கௌரவித்து அவர்களுக்கான நேர்த்தியான கல்விச்சுற்றுலாவினை சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *