ஸ்பெய்னில் அமைந்துள்ள தீவில் தீ பரவல்

ஸ்பெய்னில் உள்ள தீவு ஒன்றில் நேற்றைய தினம் (15.07.2023) காட்டு தீ பரவியுள்ளது. இதன் போது குறித்த பகுதியில் இருந்த 500க்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இத் தீ பரவல் தொடர்பாக கருத்து வெளியிட்ட கேனரி தீவுகளின் தலைவர் பெர்னாண்டோ கிளவிஜோ ,குறித்த தீ விபத்தில் 11வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய மக்களின் எண்ணிக்கை 1000ஐ எட்டக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தீப் பரவலினால் சுமார 346 ஏக்கர் நிலம் எரிந்து தீக்கிரையாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

தீயிணை கட்டுப்படுத்துவதற்காக 4 ஹெலிகப்படர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *