பலத்த காற்றினால் இருவர் உயிரிழப்பு

தற்போது அனைத்து பிரதேசங்களிலும் கடுமையான காற்று வீசுகிறது. இதனால் வீட்டின் கூறைகள் பறந்து செல்லுதல்,மரங்கள் முறிந்து விழுதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் மரம் முறிந்து விழுந்து இருவர் உயிரிழந்ந சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அம்பலாங்கொடை அக்குரஸ்ஸ பகுதியில் மரமொன்று முறித்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன பழுது பார்க்கும் நிலையத்தின் மீது காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதன் போது இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் பலத்த காயத்திற்குள்ளானார்கள்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *