ரஷ்யாவின் வெடிப்பொருள் கிடங்கின் மீது உக்ரைன் ஆளில்லா விமான தாக்குதல்..!

உக்கரைன்க்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரினால் அந்நாடுகள் மட்டு மல்ல உலகில் பல நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில் உக்ரைன் ஆனது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் உள்ள வெடிப்பொருள் கிடங்கின் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதல் காரணமாக அப்பிரதேசத்தின் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இதே வேளை இப்பகுயில் ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் இத்தாக்குதலினால் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.

இதே வேளை உக்ரைனின் கார்கிவ் பகுதிக்கு வடகிழக்கே குபியான்ஸ்க் நகர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *