பயங்கரவாத தாக்குதலில் 167 ராணுவ வீரர்கள் பலி…!

பயங்கரவாதிகளின் தாக்குதலில் எத்தியோப்பியாவை சேர்ந்த 167 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சோமாலியாவின் அல்ஷாப் பயங்கரவாதிகள் சோமாலிய அரசிற்கு எதிராக போரிடுகின்றனர்.இந்நிலையில் சோமாலிய அரசாங்கம் அவர்களை ஒடுக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.இதற்கு எத்தியோப்பியா,உகண்டா ஆகிய நாடுகளும் சோமாலியாவிற்கு உறுதுணையாக செயற்படுகின்றன.

இந்த வகையில் சோமாலியாவின் மேற்கு பகுதிகளில் அல்ஷபாப் பநங்கரவாதிகள் முகாமிட்டுள்ளதாக உளவு பிரிவினர்க்கு தகவல் கிடைத்திருந்தது. இதற்கமைய எத்தியோப்பிய இராணுவ வீரர்கள் தீவிர ரோந்து நடவடிக்கையினை அப்பகுதியில் மேற்கொண்டனர்.இதனையடுத்து அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.இதன் போது 167 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *