அடித்து ஒருவர் கொலை…!

பணம் கொடுப்பதாலும் வாங்குவதாலும் விரிச்சல்கள் உறவுகளுக்கிடையில் ஏற்படுகின்றன. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.இந்த கொடுக்கல் வாங்குதல் நடவடிக்கையால் ஒரு உயிரே இவ் உலகை விட்டு பிரிந்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெகம பிரதேசத்தில் உள்ள பாலைவனத்தில் நேற்று நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிபில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்

மஹியங்கனை ஊரணிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பணத் தகராறு காரணமாக இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மற்றொருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மற்றைய நபர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கொலையை செய்த 35 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பிபில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *