இந்த பாதையில் பயணித்து இருக்கிறீர்களா?

பாரதி
பாதையில்
பார்வையில்
ஏதடா?

தடை.
கவியின்
அரங்கம்.

கவிதைகளின்
வரம்
உரம்
தரம்
மற்றதெல்லாம்
வீண்
மரம்.

ஆக்கியோனே!

மனதில்
ஓர்
குறை!

நின்னை
புதைக்கயிலே!

சுற்றி
நின்றவர்
பதினாறு
பேராம்!

சுதந்திரம்
பாரதம்
தமிழ்
சிந்து
நதி
முதல்
தேம்ஸ்
நதி
வரை
எண்ணத்தால்
எழுத்துக்களால்
வண்ணம்
தீட்டியவனுக்கு
சாதி
வர்ணம்
தீட்டி
ஒதுங்கியவன்
எவன்?

சுதந்திரவேள்வியில்
உன்னை
ஒதுக்கி
விட்டவன்
எவன்?

காட்டாறு
போல்
சுழன்றடிக்கும்
கவிதையின்
முன்
சாதிகள்
இல்லையடி
பாப்பா?

என்று
உரைத்தவனை
ஏன்
தமிழக
மக்கள்
பாரத பூமி
சுதந்திர
பங்கேற்பாளர்கள்
அதன்
மித
தீவிர
தலைவர்கள்
அகிம்சை வாதிகள்
காளி
பக்தர்கள்
புரட்சி யாளர்கள்
கிளர்ச்சி யாளர்கள
என்று
ஏன்
ஒதுங்கி
போனார்கள்?

பாரதி
உன்
தனல்
அனல்
அடங்காத
சுழல்.

அதன்
தீவிரத்தை
எவரும்
கண்டறிய
இயலா
பாகைமானி?

ஒட்டுமொத்த
உலகம்
உன்னை
புதைக்கையில்
அருகிருந்து
அலறி
இருக்க
வேண்டாமா?

பாரதி
ஒர்
கேள்வி.

நீயும்
இருக்கையில்
சக
மனிதன்
போல்
தானோ?

இந்த
தீ
நீ
இறந்தவுடன்
பற்றியதோ?

இனி
அடங்காது.

அதன்
தீவிரத்தின்
வேகம்
இயற்கை
கொள்ளாது.

பதிலை
தேடி
பயணிக்கையில்
பாரதி
ஒர்
அதிசயம்.

கேலோமி🌹🌹
மேட்டூர் அணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *