அம்புலன்ஸின் ஐஸ் கடத்திய நபர் கைது..!

அம்புலன்ஸ் வண்டியில் நோயாளிகளை ஏற்றி செல்வார்கள் என்று பார்த்தால் ,போதை பொருட்களை அல்வா ஏற்றி செல்கிறார்கள்.

இதை கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம் 179 கிராம் ஐஸ் போதைப்பொருளை அம்புலன்ஸ் வண்டில் வைத்து கடத்தி சென்றதன் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது மன்னாரில் நடந்துள்ளது.மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று முன்தினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன் போது அம்பலன்ஸின் சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் வைத்தியசாலையில் பணிபுரிபவர் என்றும் ,தப்பி ஓடிய சாரதி முருங்கன் ஆதார வைத்திய சாலையில் பணியாற்றுபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை கைது நடவடிக்கையின் போது குறித்த இருநபர்களும் பொலிஸாரை தாக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மன்னார் வைத்திய சாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *