பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா…?

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிப்பொருட்களின் விலைகள் அதிகரிகப்பட்டுள்ளன.

ஒட்டோ டீசலின விலை 10ரூபாவினாலும்,சுப்பர் டீசலின் விலை 62 ரூபாவினாலும் ,சிபெட்கோ மற்றும் லஙகா IOC நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய தனியார் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் மீண்டும் எரிப்பொருட்களின் விலை அதிகரித்தமையானது மக்களை மேலும் கஷ்டத்திற்குள்ளாக்கியுள்ளது.

இதே தருணத்தில் பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படுமாயின் மேலும் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

நிறைய மக்கள்,பாடசாலை மாணவர்கள் என பலரும் தற்போது பஸ்ஸிலேயே தமது பயணங்களை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *