பேருந்துகளில் ஒரே சத்தமாக தொலைபேசி பேசுவது|தடை செய்யப் பரிந்துரை
தமிழ்நாடு சென்னையில் மாநகர பேருந்துகளில் ஒரே சத்தமாக தொலைபேசி பேசுவது பிரயாணம் செய்யும் சக பயணிகளுக்கு சத்த் இடையூறு ஏற்படுவது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் புகார்களை சமாளிக்கமுடியாத நிலையில் இருப்பதாகச்சொல்லப்படுகிறது. குறிப்பாக பகல் இரவு என எந்தவேளையாகினும் அருகில் உள்ள சக பிரயாணிகள் குழந்தைகள் முதியவர்கள் என்றாலும் கவனத்தில் எடுக்காது மிக சத்த தொலைபேசி பேசுவதை கட்டுப்படுத்யவேண்டும் என்ற கருத்துகள் வலுப்பெற்று வருகின்றன.
குறித்த புகார்களை கருத்திலெடுத்த மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் , பேருந்துகளில் சத்தமாக தொலைபேசி பேசுவது, பாடல்களை கேட்பது போன்ற நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் என அறியவருகிறது.