சீருடைக்கும் பாடநூல்களுக்கும் சீனாவிடமும் இந்தியாவிடமும் உதவி கோரல்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் பாடநூல் புத்தகங்களுக்காக சீனா மற்றும் இந்தியாவின் உதவியைக் கல்வி அமைச்சு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விடயம் தொடர்பாகக் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக்க தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் ஒன்றிலேயே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.


அதனடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை வழங்கத் துணிகளைப் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட கலந்துரையாடலில் சீனா உதவியை மேற்கொள்ள சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மொத்தமாக தேவைப்படும் துணியில் அரவாணிகளுக்கும் தந்துதவ சீனா இணங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவகையிலேயே பாடசாலை மாணவர்களுக்கு தேவையான இலவச பாடநூல்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசிகளை இந்தியாவிலிருந்து நீண்டகாலக்கடன் அடிப்படையில் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவையும் வெற்றியளிக்கும் எனவும் கல்வியமைச்சின் மேலதிக செயலாளர்  ஹேமந்த பிரேமதிலக நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *