போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை…!

கடந்த 31ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரி பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.இதற்கமை போக்குவரத்து கட்டணத்தை 5% மாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவத்துள்ளது.

35 ரூபாவால் எரி பொருட்கிளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் எமது சேவைகள் பாதிப்படைகிறது.

எரி பொருட்களின் விலை குறைவடைந்த சந்தர்ப்பத்தில் போக்குவரத்து கட்டணத்தை குறைத்தோம் .தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது ஆகவே அதிரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என சங்கத்தின் தலைவர் என் .எம் .கே ஹரிச்சந்திர பத்ம ஶ்ரீ தெரிவித்துள்ளார்.

எனினும் ஏற்கனவே பொருளாதார பிரச்சினையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த போக்குவரத்து கட்டண அதிகரிப்பானது பெரும் சுமையாக அமைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *