விளை நிலம் விலை நிலமாகிவிட்டது..!

பார்க்கப் பசி தீரும் ,
கண் குளிரும் …!


எங்கும் பச்சை
நெடும் வயல்கள் …!


வெள்ளை நாரைகள்
ஆங்காங்கே காத்து
நிற்கும் …!

அழகு
கண் பரிக்கும் …!


அன்னை பூமிக்கு
பச்சை பட்டாடை
கட்டியது போலிருந்த
காலமெங்கே போனது …!


கண்ணகி தலை விரி
கோலமாக வழக்குரைக்க
நின்றது போல் …!

பாஞ்சாலி
சபதமிட கலங்கிய
சபையினைப் போல்
விளை நிலங்கள் இங்கே
விலை நிலமாகிப் போனதே …!


பச்சை நெல் வயல்கள்
பார்வைக்கு அரிதானதே …
என்னே என் தாய்த்திருநாடே …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *