இதனால் மட்டுமே உயரும் வாழ்க்கை..!

சிகரம்…..❗

சிகரம் தொடுவது ஒன்றும்
சிரமமான காரியம் அல்ல
சிந்தனையில்❗

வந்து உன்னை ஆராத் தழுவி வாழ்த்துக்கள் பாடி
வரவேற்கப் போவதில்லை
வெற்றி❗

வெறு வாய்மென்று
வயிற்றுப் பசி தீர்வதில்லை
தீராத நோயுமல்ல
வறுமை❗

வாடி வதங்கி
அடங்கி ஒடுங்கி
அடுப்பங்கரை பூனை போல்
படுத்துக் கிடப்பதில்
படர்வதில்லை
திறமை❗

எறும்புகளுக்கு யாரும்
ஊட்டி விடுவதில்லை
உக்காந்து
காலம் கடத்த
கதை
பேசிக் கொண்டிருப்பதில்லை❗

காரியம்
கை கூடும் வரை
கடின உழைப்பில்
கண்ணாய் இருக்கும்❗

சும்மா இருந்து கொண்டு
சீகரம் தொடும்
சிந்தனை யா❓

இரவு பகல் இழந்து
பசி தூக்கம் மறந்து
பாடுபட்டாலே பார்க்க முடியும்
சிகரம் ❗

உன்னை
நீ அறிந்து
உன் தேவை
உணர்ந்து
உழைத்தால் மட்டுமே
உயரும் வாழ்க்கை… ❗

அ. அ. நவாஸ்..
வவுனியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *