ATM மூலம் ஒரு கோடிக்கும் அதிக பணம், துணிச்சல் கொள்ளை..!

ஏ.டி.எம் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தினை துணிச்சலாக கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

புத்தளம் மதுரங்குளி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் தனியார் வங்கியிலேயே இவ்வாறு கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளது.

அங்கு வருகை தந்த கொள்ளையர்கள், ஏ.ரி.எம். இயந்திரம் பழுது என்றும் அதனை திருத்தப்போவதாகவும் கூறி, எவ்விதமான பதற்றமுமின்றி,

திறப்பு ஒன்றின் மூலம் ஏ.ரி.எம். இயந்திரத்தின் பின் கதவைத் திறந்து பணம் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்குள்ளே சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனையடுத்து, இரகசிய இலக்கங்களை உட் செலுத்தி குறித்த ஏ.டி.எம் இயந்திரத்தை திறந்த கொள்ளையர்கள் அந்த இயந்திரத்தில் இருந்த,

சுமார் ஒரு கோடிக்கு அதிகமான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் நடமாட்டம்,போக்குவரத்தின் போதே குறித்த கொள்ளை இடம்பெற்றுள்ளது.இதனால்பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *