கடல் இருக்க வேறு என்ன வேண்டும்..!

மீனவர்கள்…. ❗

விபத்தில் விளக்கூடிய
விவகாரம்
ஆப்தத்தான பயணம்
ஆனாலும் அவசியம்
போகவேண்டிய தருணம்
கடலாடி கரை சேருமுண்ணே
எதிர் நோக்கலாம் மரணம்…. ❗

மார்தட்டிக் கொண்டே
மீண்டும் மீண்டும்
ஊர் விட்டு உறவு விட்டு
உற்ற துணை தான் விட்டு
வறுமையை விரட்டி
வயிற்றுப் பசி தீர்க்க
புறப்படும். பயணம் ….. ❗

திட்டித் தீர்த்தலும்
கொட்டிக்கொடுப்பாள்
வட்டி இல்லா வாழ்வாதாரம்
தரையில் தொலைந்த
எங்கள் எதிர்காலம்
அலைகளுக்கு நடுவில்
வலை களில் அவள் கொடுப்பாள்
கொஞ்சமும் தளராத எண்ணம் ❗

யார் வீட்டு முன்னாலும்
மானம் விட்டு
மரியாதை கெட்டு
மனிதம் மறந்து விட்ட
மனிதர்கள் முன்னாடி
மண்டி யிட்டுக் கை ஏந்தி
கண்ணீர் விட்டு
கதறியழாத திண்ணம் ❗

கார் முகில் கிழித்து
ஒளிதரும் கதிரவன் போல்
கடலிருக்க
யாரிடமும் கையேந்தும்
எண்ணமில்லை
கடல் தாயே கை கொடுப்பாள்
காலம் தோறும்
உடல் உழைப்பால் எங்கள்
வாழ்வுக்கு வழிவகுப்பால். ❗

வானம் பார்த்த பூமியாய்
வாடி நிர்க்க தேவையில்லை
வாட்டம் போக்கி எழுந்து நடந்தால்
வாழ்வாதர்க்குத் தடையுமில்லை
துணிவே துணை நமக்கு
வாழ்வளிக்க கடல் இருக்கு
மீனவர் நம் மக்களுக்கு… ❗

அ. அ. நவாஸ்
வவுனியா… ✍️✍️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *