மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது..!

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா என்ற 23 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் கணவனை காணாத நிலையில் பொலிஸாரின் சந்தேகம் வலுத்திருந்தது.

குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய பொலிஸார் கணவரை நோக்கி தீவிர தேடுதலை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அண்மையில் முச்சக்கரவண்டியில் சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட வேளையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில்

“தான் மனைவியை தாக்கியதாகவும் உயிரிழந்தது தனக்கு தெரியாது” எனவும் சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

உயிரிழந்த பெண் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *