நம்பிக்கை நமது கையில்..!

நம்பிக்கை …
நமது கையில் …
உலகம் போகும் பாதை
வேறு … உன் எண்ணம் , சிந்தனை , புரிதல் வேறு … ஆனால் காலச் சக்கரம் மட்டும் சில ஒழுங்குகளோடு இயங்கிறது …!

அதைப் புரிந்து கொள்ள நாம் காலத்தோடு ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் …!

இதுவும் சாமானிய வாழ்கை முறைதான்… என்னிடம் இல்லாததை …நீ கொஞ்சம் கொடு ஆனால் இது பிச்சையல்ல …!

எனது புரிதலில் ஏதேனும் ஒன்றை நீ புரிந்து கொண்டிருப்பாய் அதே போல உனது புரிதலில் நான் எதையேனும் புரியாமல் விட்டிருப்பேன்..!

அதற்க்கான உனது வாழ்வின் தடங்களின் அனுபவங்கள் வேறு வேறாகத்தான் நகரும் …எனக்கான வாழ்வின் அனுபவங்களும் ஆனால் அதை ஒன்றுபடுத்தி வாழ்வதே அது நாம் எண்ணும் எண்ணங்களாக இருந்தாலும் சேர்த்த செல்வங்களாக இருந்தாலும் …!

அதைப் பகிர்ந்து கொள்ளவே மனமின்றி நான் எனது எனும் குறுகிய வட்டமே நமக்கான இன்பமான வாழ்வை தொலைத்தது … நான் எனது எனும் ஆணவம் தொழைத்தாலே … நம் மனதிலிருந்து அந்த நினைவைக் கூட …முற்றிலிம் அழித்தாலே … இங்கே எல்லாம் நலமாகும் …!
🙏❤️🙏

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *